தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மோன்தா புயல் எதிரொலி: ஏனாமில் பகல் 12 மணிக்கே கடைகள், வணிக நிறுவனங்களை மூட புதுச்சேரி அரசு உத்தரவு

புதுச்சேரி: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மோன்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது. இது மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திராவின் மசூலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம் இடையே இன்றிரவு தீவிர புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே, 'மோன்தா' புயல் எதிரொலியாக ஏனாமில் இன்று பகல் 12 மணிக்கே கடைகள், வணிக நிறுவனங்களை மூட புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

ஆந்திராவில் புயல் கரையை கடக்கும் போது 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஏனாம் மண்டல நிர்வாக அதிகாரி அன்கித் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், 1800 4252303, 0884-2321223, 0884-2323200 ஆகிய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, இந்த நிர்வாகம் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மண்டல அதிகாரி அன்கித் குமார் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

* அவசரகாலப் பணிகளைச் செய்ய போதுமான எண்ணிக்கையிலான JCBகள் மற்றும் மரம் வெட்டும் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

* புயலைக் கருத்தில் கொண்டு அனைத்து துணை மையங்களும் ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24X7 அடிப்படையில் செயல்பட வைக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், JIPMER, யானம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை காப்பாற்ற தயாராக உள்ளது.

* பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி இந்த பகுதியில் சிறிய மற்றும் பெரிய பணிகள் சுகாதாரப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

* தேவைப்படும் இடங்களில் மின்சாரத் துறை மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.

* மதுபானக் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற கடைகள் 28.10.2025 இன்று மதியம் 12 மணி முதல் மூடப்படும்.

* குடிநீர் விநியோக நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News