தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுச்சேரி அருகே நாளை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல்: பாலச்சந்திரன் பேட்டி

Advertisement

சென்னை: புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடக்கிறது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; சென்னையில் தென் கிழக்கே 300 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல் நிலை கொண்டுள்ளது. நாகையில் இருந்து 260 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் நாளை புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. நாளை காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்க உள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் 13 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 - 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்; இடையிடையே 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 21 செ.மீ.-க்கு மேல் மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 12 முதல் 20 செ.மீ. மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களில் நாளை மிக மிக பலத்த மழை பெய்யும் என்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் - குழப்பம் ஏன்?

காற்றின் வேகம், காற்று குவிதலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, முன்னறிவிப்பில் குழப்பம் ஏற்பட்டது. அண்மையில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களில் இது மாறுபட்டது. ஒவ்வொரு கணிப்பின்போதும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் மாற்றம் காணப்பட்டது. ஒரேநேரத்தில் பலத்த மழை பெய்யுமா, அல்லது பரவலாக மழை பெய்யுமா என்பதை கணிக்க முடியாது என்று விளக்கம் அளித்தார்.

Advertisement

Related News