பெஞ்சல் புயலின் கனமழையிலும் ஆவின் நிறுவனம் மூலம் 100% பால் விநியோகம்
Advertisement
கனமழை இருந்த போதிலும் பால் விநியோகத்தில் எவ்வித சிறு தடையும் ஏற்படவில்லை. மேலும் சென்னை மாநகராட்சி உடன் இணைந்து தேவைப்படும் முகாம்களுக்கு ஆவின் பால், பால் பவுடர் மற்றும் யூஎச்டி பால் உடனுக்குடன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை முழுவதும் உள்ள அனைத்து பாலகங்களிலும் பால் மற்றும் பால் பொருட்கள் போதுமான அளவு இருப்பு வைத்து விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் பொது மக்களுக்கு பால் எளிதில் கிடைக்க 8 ஆவின் பாலகங்கள் மூலமாக 24 மணி நேரமும் பால் விநியோகம் நடைபெற்று வருவதாக ஆவின் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement