தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசுடன் சி.வி. சண்முகம் திடீர் சந்திப்பு

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வசித்து வருகிறார். இவருக்கும், இவரது மகன் அன்புமணிக்கும் சமீப காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. கட்சியில் அதிகாரம் மற்றும் யாருடன் கூட்டணி என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. கட்சி மற்றும் சின்னம் யாருக்கு என்பதிலும் இரு தரப்புக்கும் போட்டி வலுத்து வருகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் அன்புமணி உறுதியாக இருக்கிறார். ஆனால் தமிழகத்தின் களநிலவரம் அறிந்த மருத்துவர் ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம் பாமகவின் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு அதிமுகவும் தங்கள் பக்கம் இழுக்க காய் நகர்த்தி வருகிறது.

Advertisement

இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநிலங்களவை எம்பியுமான சி.வி.சண்முகம் இன்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது அக்டோபர் 24ம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெறும் தனது அண்ணன் சி.வி.ராதாகிருஷ்ணனின் மகன் அர்ஜுன் திருமணத்திற்கு அழைப்பு விடுத்து, அதற்கான திருமண அழைப்பிதழையும் சி.வி சண்முகம் வழங்கினார். அண்ணன் மகன் திருமண அழைப்பிதழை மருத்துவர் ராமதாசிடம் வழங்குவதற்காக சந்தித்த போதிலும், கூட்டணி மற்றும் அரசியல் நிலைவரம் குறித்தும் பேசி இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Advertisement