தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மணிக்கணக்கில் நெரிசலில் சிக்கினால் ஏன் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும்? உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி

புதுடெல்லி: கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள பாலியேக்கரா சுங்கச்சாவடியில் தேசிய நெடுஞ்சாலை 544 பகுதியில் நடந்து வரும் பணிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டதால் கடந்த ஆக.6ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் வசூலிப்பதை கேரள உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் வினோத்சந்திரன், என்வி ஆஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள், 65 கிலோமீட்டர் நெடுஞ்சாலைப் பகுதியை கடக்க 12 மணி நேரம் எடுத்துக்கொண்டால், பயணி ஏன் ரூ.150 சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். நீதிபதிகள் கூறுகையில்,’ அங்கு லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும், 12 மணி நேர பயணம் என்பது நியாயமல்ல. எனவே சுங்கச்சாவடி வசூலை நிறுத்தி வைத்த உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை’ என்று தெரிவித்தனர்.