தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனது காரை விடுவிக்க, சுங்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்ற நடிகர் துல்கர் சல்மானின் கோரிக்கையை ஏற்க கேரள உயர் நீதிமன்றம் மறுப்பு..!!

கேரளா: தனது காரை விடுவிக்க, சுங்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்ற நடிகர் துல்கர் சல்மானின் கோரிக்கையை ஏற்க கேரள உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பூடானில் இருந்து சட்டவிரோதமாக கார்களை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்து வந்தது அம்பலமானது. பூடான் ராணுவத்தினர் பயன்படுத்திய கார்களை குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து அதிக விலைக்கு இந்தியாவில் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நடந்த சோதனையில் பல முன்னணி நடிகர்கள் சட்டவிரோதமாக கார்களை வாங்கியது தெரிய வந்தது. குறிப்பாக துல்கர் சல்மான் மற்றும் மற்றொரு கேரள நடிகர் பிரிதிவிராஜ் இல்லத்தில் சோதனை நடந்தது. நாடு முழுவதும் பல இடங்களில் நடந்த சோதனையில் 39 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

இதில் துல்கர் சல்மானின் 6 கார்களும் உள்ளடங்கியது. அதன் தொடர்ச்சியாக துல்கர் சல்மான் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் முறையான ஆவணங்களின் அடிப்படையிலேயே வாகனங்களை வாங்கியதாக குறிப்பிட்டார். அதன் அடிப்படியில் பறிமுதல் செய்யப்பட்ட கார்களை சுங்கத்துறையினர் விடுவிக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் விசாரணை ஆரம்பநிலையில் இருக்கும்போது காரை விடுவிக்க உத்தரவிட முடியாது. கொச்சி சுங்கத்துறை கூடுதல் ஆணையரிடம் முறையிடுமாறு துல்கர் சல்மானுக்கு கேரள உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. மேலும், துல்கர் சல்மானின் கோரிக்கையை பரிசீலித்து உரிய உத்தரவை ஒரு வாரத்தில் பிறப்பிக்குமாறு சுங்கத்துறைக்கு கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது.

 

Advertisement

Related News