தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதிய உறுப்பினர் நியமிக்கப்படும் வரை தற்போதைய உறுப்பினரே பணியை தொடரலாம்: நுகர்வோர் குறைதீர் ஆணைய வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

 

Advertisement

சென்னை: நாகர்கோவில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உறுப்பினராக எஸ்.நாகேந்திரன் கடந்த 2022 ஏப்ரல் 30ம் தேதி நியமனம் செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் 4 ஆண்டுகள் அல்லது 65 வயது. இந்நிலையில், கடந்த ஜூன் 29ம் தேதி நாகேந்திரன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, தனது பணிக்காலத்தை நீட்டிக்க கோரி நாகேந்திரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜராகி, புதிய விதிகளின்படி 65 வயது ஆனாலும் புதிய உறுப்பினர் நியமிக்கப்படும் வரை பணியை தொடரலாம். ஆனால், புதிய உறுப்பினர் நியமிக்கப்படாமல் மனுதாரரை பணியிலிருந்து விடுவித்துள்ளனர். இது விதிகளுக்கு முரணானது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் தலைவர் அல்லது உறுப்பினரின் பதவிக்காலம் முடிந்தாலும் அந்த பணிக்கு புதிய நபர் தேர்வாகும் வரை அவர்கள் பணியை தொடரலாம். மனுதாரரின் பணி 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இதுவரை நாகர்கோவில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு உறுப்பினர் நியமிக்கப்படாததால் அவரை பணியிலிருந்து விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. புதிய உறுப்பினர் நியமிக்கப்படும்வரை அவர் பணியை தொடரலாம் என்று உத்தரவிட்டார்.

Advertisement