தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடப்பாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.8% ஆக இருக்கும்: ரிசர்வ் வங்கி கணிப்பு

டெல்லி: அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி 6.4% ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜி.டி.பி.) 6.8% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முன்னதாக இது 6.5% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியிருப்பதாவது; தற்போதைய வரி மற்றும் வர்த்தகக் கொள்கைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை ஆகியவை வெளிநாட்டு வணிகத்தை பாதிக்கக் கூடும்.

Advertisement

அதோடு, புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு இடையில், முதலீட்டாளர்களின் எச்சரிக்கை உணர்வின் எதிரொலியாக சர்வதேச நிதி சந்தைகளில் நிலவும் ஏற்ற இறக்கங்கள், நமது வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். கடந்த ஆகஸ்ட் 15-ந்தேதி பிரதமரால் அறிவிக்கப்பட்ட வளர்ச்சிக் கட்டமைப்பு சீர்திருத்தங்களை செயல்படுத்துவது, ஜி.எஸ்.டி.யை ஒழுங்குபடுத்துவது ஆகிய நடவடிக்கைகள், வெளிப்புறத் தடைகளின் சில பாதகமான விளைவுகளை ஈடுசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காரணிகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்த ஆண்டுக்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இப்போது 6.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது எங்கள் முந்தைய கணிப்பான 6.5%-ல் இருந்து சற்று அதிகமாகும். அதே சமயம், நடப்பு நிதியாண்டின் 2-ம் காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி 7% ஆகவும், மூன்று மற்றும் நான்காம் காலாண்டுகளில் முறையே 6.4% மற்றும் 6.2% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே போல், அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி 6.4% ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

Related News