கடலூர் அருகே பரிதாபம் எஸ்ஐ ஓட்டிய கார் மோதி 2 தொழிலாளிகள் பலி
கடலூர்,: கடலூர் மாவட்டம் ஆவினங்குடி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன்(49). இவரும் போலீஸ்காரர் இமாம் உசேனும் (33) நேற்று ஒரு காரில் கடலூர் சென்றுவிட்டு மாலையில் ஆவினங்குடி திரும்பி கொண்டிருந்தனர்.
Advertisement
கடலூர்- விருத்தாசலம் சாலையில் அன்னவெளி என்ற இடத்தில் வந்தபோது, சாலையோரம் டூவீலருடன் நின்றிருந்த 4 பேர் மீது கார் மோதியது. இதில் கட்டிட தொழிலாளர்கள் ஜெயராஜ்(45), வடிவேல்(45) ஆகியோர் பலியாகினர். பாஸ்கர்(47), மோகன்(60) படுகாயம் அடைந்தனர்.
Advertisement