தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலூர் ரயில் விபத்து.. Inter Locking System என்றால் என்ன?: ரயில்வே தொழிற்சங்க தலைவர் இளங்கோவன் விளக்கம்!!

Advertisement

கடலூர்: இன்டர்லாக்கிங் சிஸ்டம் என்றால் ரயில்வே கேட் மூடினால்தான் சிக்னலே வரும் என்று ரயில்வே தொழிற்சங்க தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில், 3 மாணவர்கள் பலியாகினர். மேலும், படுகாயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து ரயில்வே தொழிற்சங்க தலைவர் இளங்கோவன் மற்றும் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் அளித்த பேட்டியில்;

ரயில்வே தொழிற்சங்க தலைவர் இளங்கோவன்:

இன்டர்லாக்கிங் சிஸ்டம் என்றால் ரயில்வே கேட் மூடினால்தான் சிக்னலே வரும். நாடு முழுவதும் ரயில்வே வழித்தடங்களில் Inter Locking System முறையை கொண்டுவர வேண்டும். செம்மங்குப்பத்தில் Inter Locking System இல்லாததால் ரயில்வே கேட் திறந்திருந்தும் ரயில் சென்றுள்ளது என்றார்.

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன்:

ரயில்வே கேட்டை திறக்க சொல்லி கேட் கீப்பரை வலியுறுத்தியுள்ளனர் . செம்மங்குப்பம் ரயில்வே வழித்தடம் Non Inter Locking System ஆகும். மூடிய ரயில்வே கேட்டை திறந்ததால்தான் விபத்து நடந்துள்ளது. வேன் மீது மோதிய ரயில் 95 கி.மீ. வேகத்தில் வந்து கொண்டிருந்தது. விபத்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட வழித்தடத்தில் செல்லக்கூடிய 5 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Inter Locking System என்றால் என்ன?:

ரயில் விபத்துகளில் இன்டர்லாக்கிங் அமைப்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இன்டர்லாக்கிங் என்பது ரயில் பாதைகள், சிக்னல்கள் மற்றும் புள்ளிகளை ஒன்றோடொன்று இணைக்கும் ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். இது ரயில்கள் மோதிக் கொள்வதைத் தடுக்கவும், பாதைகள் மற்றும் சிக்னல்கள் சரியான முறையில் இருப்பதை உறுதி செய்யவும் பயன்படுகிறது.

Advertisement

Related News