தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து: கேட் கீப்பர் சிறையில் அடைப்பு; 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!

Advertisement

கடலூர்: கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது கொலை வழக்கு, மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வாகனம் மீது அவ்வழியாக வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் அதிவேகமாக மோதியது.

இந்த விபத்தில் சின்ன காட்டுசாகையைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி சாருமதி, அவரது தம்பியும், 10ம் வகுப்பு மாணவனுமான செழியன் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு மாணவனான தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவனான விமலேஷும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பள்ளிக்கு சென்ற பிள்ளைகள் சடலமாக கிடந்ததை கண்டு ஒட்டுமொத்த கிராம மக்களே கண்ணீர் கடலில் மூழ்கியது. விபத்தில் காயமடைந்த விஸ்வேஷ், பள்ளி ஓட்டுநர் சங்கர் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் பணியில் அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை உடனடியாக ரயில்வே நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. தொடர்ந்து சிதம்பரம் ரயில்வே இருப்பு பாதை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது 7.05 மணிக்கு ரயில்வே கேட்டை மூடியதாகவும், 7.25 வரை கேட் மூடப்பட்டதே இருந்ததால் அதிக வாகனம் காத்திருக்க நேரிட்டதாகவும் அதனால் மீண்டும் கேட்டை திறந்து விட்டதாகவும் பங்கஜ் குமார் கூறியதாகவும் தெரிகிறது. இதையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், வருகிற 22 ஆம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Related News