தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலூரில் பெய்த கனமழையால் கெடிலம் ஆற்றில் மேம்பால பணிகள் பாதிப்பு: தளவாடப் பொருட்கள் நீரில் மூழ்கின!

கடலூர்: கடலூரில் பெய்த கனமழையால் கெடிலம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நேற்று கடலூரில் கனமழை பெய்தது. இந்த கனமழையானது கிட்டத்தட்ட 17 சென்டிமீட்டர் அளவுக்கு பெய்ததால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மேம்பால கட்டும் பணி முற்றிலுமாக முடங்கியுள்ளது.

Advertisement

கடலூரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கெடிலம் ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது. மேம்பால கட்டுவதற்காக பயன்படுத்தப்படும் தளவாடப் பொருட்கள் அனைத்துமே நீரில் மூழ்கியுள்ளன. தளவாடப் பொருட்களை மீட்கும் பணியை ஊழியர்கள் துரிதமாக செய்து வருகின்றனர்.

கெடிலம் ஆற்றில் மேம்பால பணி ஏற்கனவே மந்தமாக நடந்து வந்த நிலையில், மழையால் மேலும் பாலம் கட்டும் பணி முடங்கியுள்ளது. இதனால் பாலத்தை விரைவாக கட்டி முடிக்க முடியுமா என்பது கேள்வி குறியாகியுள்ளது. கடலூரில் தாழ்வான இடங்களில் தண்ணீர் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Advertisement

Related News