தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சங்கராபுரம் வட்டாரத்தில் பயிர் மகசூல் போட்டி

Advertisement

*மாவட்ட அதிகாரிகள் ஆய்வு

சங்கராபுரம் : சங்கராபுரம் வட்டாரம் காட்டுவண்ணஞ்சூர் கிராமத்தில் மாவட்ட அளவிலான மணிலா பயிர் மகசூல் போட்டி நடைபெற்றது. இந்த பயிர் அறுவடை பரிசோதனையை வேளாண்மை துணை இயக்குனர் அன்பழகன் தலைமையில் கள்ளக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பொன்ராசு, சங்கராபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஆனந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது சங்கராபுரம் வேளாண்மை அலுவலர் மோகன்ராஜ், துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், உதவி விதை அலுவலர்கள் துரை, சிவசங்கர் மற்றும் அட்மா திட்ட அலுவலர் அருண், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் வல்லரசு, விவசாயிகள் நடுவர் குழு விவசாயி கணேஷ், குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

22. சின்னமனூர் அருகே ரூ.2 லட்சத்தில் நடைபெற்று வந்த கழிவுநீர் தொட்டி கட்டும் பணிகள் நிறைவு

சின்னமனூர், ஜன. 27:சின்னமனூர் அருகே ஊராட்சி ஒன்றியத்தில் கட்டுப்பட்டுள்ள கன்னிசேவைபட்டி கிராம ஊராட்சியில் சுமார் 8000 பேர் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்கள் வீடுகளில் இருந்தும் வணிக வளாகங்களிலிருந்தும் வெளியேறும் கழிவுநீர் சாக்கடை வழியாக ஊரின் நுழைவாயில் உள்ள கன்னிசேர்வைபட்டி குளத்தில் சென்றடைகிறது.

இந்த கழிவுநீர் அப்படியே குளத்தில் சென்றடையும் போது, பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை கழிவுகள் என பலவும் அதில் சென்று சேருவதால் மாசடைகிறது.

மேலும் அந்தக் கழிவு நீரிலிருந்து கொசுக்கள், ஈக்கள், புழுக்கள் என உற்பத்தியாகி பல் வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் கழிவுநீரை சுத்திகரித்து குளத்திற்குள் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னிசேர்வைபட்டி கிராம ஊராட்சியில் கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்று ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் மெகா தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அந்தத் தொட்டியில் சரளை கற்களை கொட்டி கடக்கின்ற கழிவுநீர் அனைத்தும் சுத்தமாகி குளத்திற்குள் கலக்கிறது. இதன் காரணமாக குளம் மாசவடைவது தடுக்கப்படும். கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது.

Advertisement