தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம் ஸ்மிருதி இரானியை இழிவாக விமர்சனம் செய்ய கூடாது: ராகுல்காந்தி வேண்டுகோள்

புதுடெல்லி: அமேதி மக்களவை தொகுதியில் 2019ம் ஆண்டு ராகுல்காந்தியை தோற்கடித்தவர் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரிலால் சர்மாவிடம் தோல்வி அடைந்தார். டெல்லி லுட்யென்ஸில் உள்ள ஒன்றிய அமைச்சருக்கான அரசுபங்களாவில் வசித்து வந்த ஸ்மிருதி இரானி அந்த பங்களாவை இந்த வார தொடக்கத்தில் காலி செய்தார்.
Advertisement

மோடி தொடர்பான விமர்சன வழக்கில் எம்பி பதவி பறிக்கப்பட்ட போது ராகுல்காந்தியின் பங்களாவை அவசரகதியில் காலி செய்ய வைத்த விவகாரம் உள்பட ஸ்மிருதி இரானி மீது கடும் அதிருப்தியில் இருந்தவர்கள் தற்போது அவரை விமர்சனம் செய்தனர். இதை ராகுல்காந்தி கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் நடக்கும். எனவே அந்த விஷயத்தில் ஸ்மிருதி இரானி அல்லது வேறு எந்த தலைவரையும் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், கேவலமாக நடந்து கொள்வதையும் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மக்களை அவமானப்படுத்துவதும் அவமதிப்பதும் பலவீனத்தின் அடையாளம். அது வலிமை அல்ல என்று குறிப்பிட்டு ள்ளார்.

Advertisement

Related News