தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குற்றவாளிகளுக்கு இரக்கம் காட்ட முடியாது: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா உறுதி

புதுடெல்லி: அனைத்துவித குற்றவாளிகளுக்கு எதிராகவும் இரக்கமற்ற அணுகுமுறை கடைபிடிக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார். தப்பியோடிய குற்றவாளிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் உள்ள சவால்கள் மற்றும் உத்திகள் என்ற இரண்டுநாள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. மத்திய புலனாய்வு பிரிவு(சிபிஐ) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

Advertisement

அப்போது பேசிய அமைச்சர் அமித் ஷா, “இந்தியாவில் இருந்து தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள், சைபர் குற்றவாளிகள், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலைப்பின்னல்களின் ஒருபகுதியாக இருந்தாலும், தப்பியோடிய குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கு எதிராகவும் இரக்கமற்ற அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஊழல், குற்றம் அல்லது பயங்கரவாதத்துக்கு எதிராக மட்டுமல்ல, இந்தியாவுக்கு வௌியில் இருந்து செயல்படும் குற்றவாளிகளுக்கு எதிராகவும் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். அவர்கள் அனைவரும் இந்திய நீதி அமைப்பின்முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது. தப்பியோடிய குற்றவாளிகள் அனைவரையும் சட்டவரம்புக்குள் கொண்டு வரவும், இதற்கான திட்டவட்டமான வழிமுறைகளை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.

Advertisement

Related News