தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருவாரூர் அருகே பயங்கரம் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி கொலை

*கணவன் வெறிச்செயல்

மன்னார்குடி : திருவாரூர் அருகே உல்லாசத்துக்கு மறுத்த மனைவி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கணவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வடபாதிமங்கலம் ஊட்டியானி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(53).

இவரது மனைவி செல்வி(50). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தொழிலாளியான ரமேஷ், அடிக்கடி மதுஅருந்தி வந்து மனைவி செல்வியை உல்லாசத்துக்கு வருமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு மதுஅருந்தி வந்து மனைவியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அதற்கு செல்வி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், நான் உனக்கு வேண்டாம், நான் கட்டிய தாலி மட்டும் வேண்டுமா என்று கேட்டதுடன் தாலியை அறுத்து கீழே வீசினார்.மேலும் ஆத்திரம் அடங்காத ரமேஷ், செல்வியின் கழுத்தை பிடித்து நெரித்தார்.

இதில் செல்வி மயங்கி கீழே விழுந்தார். செல்வியின் அலறல் சத்தம் கேட்டு 2 மகன்கள் வந்து பார்த்தபோது செல்வி மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, செல்வி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து வடபாதிமங்கலம் இன்ஸ்பெக்டர் (பொ) வெர்ஜினியா, எஸ்ஐ சேகர், தனிப்பிரிவு ஏட்டு பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து ரமேஷை நேற்று கைது செய்தனர்.