கிட்னி திருட்டு வழக்கில் 2 புரோக்கர்கள் கைது
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் கவுசல்யா. இவர், கிட்னி விற்பனை செய்ததாக தகவல் வந்தது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில், திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கிட்னி அறுவை சிகிச்சை செய்ததும், இதற்காக மருத்துவமனை நிர்வாகம், ரூ.6 லட்சம் வழங்கியதும் தெரியவந்தது....
கந்து வட்டி கேட்டு மிரட்டி இளம்பெண்ணை கடத்தியவர் கைது
நெல்லை: நெல்லை அருகே பேட்டையில் கந்து வட்டி கேட்டு மிரட்டி இளம்பெண்ணையும், அவரது தம்பியையும் காரில் கடத்திய நிதி நிறுவனர், அவரது கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுன் பழனி தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி பார்வதி (32). இவர் டவுனில் நிதி நிறுவனம் நடத்தி வரும் கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த பெருமாள்...
மாணவிகள் பாலியல் புகார்; திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2 பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு
திருச்சி: மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேருக்கு கட்டாய பணி ஓய்வு கொடுத்து கல்லூரி கல்வி ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவராக பணியாற்றி, பின்னர் வணிகவியல் துறைக்கு மாற்றப்பட்டவர் பேராசிரியர் கணேசன். தொலை உணர்வு துறையில் இணை பேராசிரியராக...
மாணிக்கவாசகர் சிலையை விற்க முயன்ற 2 பேர் கைது
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே, கோயிலில் மாணிக்கவாசகர் சிலையை திருடி விற்க முயன்ற 2 பேரை, போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, செல்லம்பட்டி பகுதியில் சிலை கடத்தல் நடப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீசார் செல்லம்பட்டி பகுதியில் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்த...
ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் மான்வேட்டை கும்பல் கைது
*நாட்டுத்துப்பாக்கி, டூவீலர்கள் பறிமுதல் ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் ரேஞ்சர் செல்வமணி தலைமையில் வனத்துறையினர், நேற்று வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது மருதடி சாவடி பகுதியில் சுற்றித் திரிந்த மர்மநபர்களை...
காதல் திருமணம் செய்ததால் எதிர்ப்பு மருமகனை வெட்டி கொன்ற மாமனார்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கூட்டத்து அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (32). பால் கறக்கும் தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் சந்திரன் (49) மகளான கரூரில் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் ஆர்த்திக்கும் (21) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்...
திருக்கோவிலூர் அருகே சொத்து தகராறு டிராக்டர் ஏற்றி தந்தையை கொன்ற கொடூர மகன்
திருக்கோவிலூர்: சொந்து தகராறில் தந்தையை டிராக்டர் ஏற்றி கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த ஒடுவன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (70), விவசாயி. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சுசீலாவுக்கு ஒரு மகனும், 2வது மனைவி சரஸ்வதிக்கு சந்திரசேகர், சிவக்குமார், சிவசங்கர் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்....
போலீஸ் நிலையம், சோதனைச்சாவடி என நெல்லையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது
நெல்லை: நெல்லை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தச்சநல்லூர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தச்சநல்லூர் எஸ்ஐ மகேந்திர குமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ஊருடையான்குடியிருப்பு காட்டுப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான அருண்குமார் மற்றும் ஊருடையான்குடியிருப்பைச் சேர்ந்த ஹரிஹரன் ஆகிய...
முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளி கைது
சென்னை: முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டார். ஆழ்வார்பேட்டை சித்ரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் வீட்டிற்கு நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். சோதனையில் அது புரளி என தெரிந்தது. போலீசாரின் விசாரணையில், மர்ம போன் செய்தவர் திருப்போரூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஐயப்பன்(36) என தெரியவந்தது....