தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த 14 மீனவர்கள் சிறைபிடிப்பு 2 படகுகளும் பறிமுதல்: இலங்கை கடற்படை அட்டகாசம்

ராமேஸ்வரம்,: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 391 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்குச் சென்றன. இரவு தனுஷ்கோடி அருகே இந்திய கடல் எல்லையோரம் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜஸ்டின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை சிறைபிடித்தனர். அதிலிருந்த மீனவர்கள் ஜஸ்டின் (56), மோபின் (20), சைமன் (53), சேகர் (30), டெனிசன் (36) ஆகிய 5 பேரையும் கைது செய்து மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல், பாம்பன் தெற்குப் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 100க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில், மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை விரட்டினர். பாம்பன் பகுதியை சேர்ந்த டேவிட் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகை சிறைபிடித்து 9 பேரை கைது செய்தனர்.அவர்களை புத்தளம் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 மீனவர்களையும் சிறையில் அடைத்தனர்.

சாலை மறியல்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களின் குடும்பத்தினர் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில், ராமேஸ்வரம் - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலையோரம் அமர்த்தி போக்குவரத்தை சரி செய்தனர். ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related News