ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த 14 மீனவர்கள் சிறைபிடிப்பு 2 படகுகளும் பறிமுதல்: இலங்கை கடற்படை அட்டகாசம்
இதேபோல், பாம்பன் தெற்குப் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 100க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில், மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை விரட்டினர். பாம்பன் பகுதியை சேர்ந்த டேவிட் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகை சிறைபிடித்து 9 பேரை கைது செய்தனர்.அவர்களை புத்தளம் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 மீனவர்களையும் சிறையில் அடைத்தனர்.
சாலை மறியல்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களின் குடும்பத்தினர் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில், ராமேஸ்வரம் - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலையோரம் அமர்த்தி போக்குவரத்தை சரி செய்தனர். ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.