தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புளியந்தோப்பு, கொடுங்கையூரில் ரவுடிகள் 3 பேர் கைது

Advertisement

பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி பி.வி.காலனி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (40). இவர் மணல், ஜல்லி கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் மாலை பி.வி.காலனி 29வது தெருவில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது குடிபோதையில் கூட்செட் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (23) என்பவர் ஆட்டோ கண்ணாடியை உடைத்துவிட்டு ஆரோக்கியசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுபற்றி ஆரோக்கியசாமி கொடுத்த புகாரின்படி, எம்கேபி.நகர் போலீசார் வழக்குபதிவு செய்து பிரவீன் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொடுங்கையூர் லட்சுமிஅம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (37). இவர் நேற்றுமுன்தினம் கொடுங்கையூர் மணலி சாலை திருவள்ளுவர் சாலை சந்திப்பில் நின்றிருந்தபோது குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட ரவுடி ஒருவர் கண்ணாடியால் சீனிவாசனை குத்தியதில் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து புகாரின்படி, கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி ரவுடி அரவிந்த்தை (28) கைது செய்தனர்.

புளியந்தோப்பு திக்காகுளம் பகுதியை சேர்ந்தவர் பிரேம் (24). இவர் வங்கியில் பணியாற்றுகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் சென்றபோது 2 பேர் மறித்து கத்தியால் பிரேம் தலையில் வெட்டிவிட்டு தப்பினர். இதில் காயம் அடைந்த பிரேம், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார்.இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குபதிவு செய்து பட்டாளம் தேவராஜ் தெருவை சேர்ந்த மகேஷை (19) கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.

 

Advertisement