தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பந்தலூர் அருகே வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்களிடம் பலாத்கார முயற்சி

*வாலிபருக்கு தர்மஅடி

பந்தலூர் : பந்தலூர் அருகே தேவாலாவில் வீட்டின் கதவுகளை தட்டி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்களிடம் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே தேவாலா செத்தக்கொல்லி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்பகுதியில் வசித்து வரும் ரிஷால் (24) என்பவர் நேற்று அதிகாலை அந்த பகுதியில் உள்ள வீடுகளின் கதவுகளை தட்டி, கதவு திறக்கும்போது அத்துமீறி நுழைந்து தனியாக இருக்கும் பெண்களிடம் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு திரண்டு வந்த மக்கள், ரிஷாலை பிடித்து கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர், தேவாலா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு காவல்நிலையம் கொண்டு சென்றனர்.

பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில் வழக்குபதிவு செய்து ரிஷாலை கைது செய்தனர்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் கரியசோலை பகுதியில் நிறுத்தியிருந்த அரசு பேருந்தை கடத்தி சென்று தேவாலா டேன்டீ சரகம் 4 பகுதியில் நிறுத்தி சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.