மதுரை மாநகராட்சி வரிவசூல் முறைகேடு மேலும் ஒரு ஒப்பந்த ஊழியர் கைது
இதற்கிடையில் வரி முறைகேடு வழக்கு தொடர்பாக மாநகராட்சி 51வது வார்டு திமுக கவுன்சிலரும், வரிவிதிப்புக்குழு தலைவருமான விஜயலட்சுமி, 96 வது வார்டு ஹார்விபட்டியை சேர்ந்த ஒப்பந்த ஊழியர் செந்தில்பாண்டி ஆகியோர் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.
இதைத்தொடர்ந்து செந்தில்பாண்டி கைது செய்யப்பட்டார். தேவையெனில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என, விஜயலட்சுமியிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியதாக போலீசார் தெரிவித்தனர். விஜயலட்சுமி ஏற்கனவே மண்டல தலைவர்களுடன், குழுத்தலைவராக இருந்து ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.