தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காதல் தகராறை விலக்கி விட்ட நீதிமன்ற ஊழியர் சரமாரி குத்திக்கொலை: திருவாரூர் அருகே பயங்கரம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரை சேர்ந்தவர் முகமதுஆதாம் (23). தென்காசியில் டிரைவராக வேலை பார்த்து வந்த இவர், திருவாரூர் அருகே புலிவலம் காந்திநகரை சேர்ந்த மோகன் மகள் சவுமியா (21) என்பவரை கடந்த 5 வருடமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் சமீபகாலமாக முகமது ஆதாமிடம் பேசுவதை சவுமியா நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முகமது ஆதாம், தனது உறவினர்களான கூத்தாநல்லூரை சேர்ந்த முகமது ரசூல்தீன் (23), தென்காசியை சேர்ந்த ஹாஜி முகமது (23) ஆகியோருடன் நேற்றுமுன்தினம் இரவு 10.30மணி அளவில் புலிவலத்தில் உள்ள சவுமியா வீட்டுக்கு சென்று அங்கு தகராறில் ஈடுபட்டார். இதனையடுத்து சவுமியாவின் தம்பி கோபிகிருஷ்ணனுக்கும் (19), முகமதுஆதாம் தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த திருவாரூர் அருகே தியானபுரம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (28), இவரது நண்பரான தட்சிணாமூர்த்தி (35) ஆகியோர் ஓடிவந்து கைகலப்பை விலக்கி விட்டனர். இதில் ஆத்திரமடைந்த முகமதுஆதாம் தரப்பினர், கத்தியால் சந்தோஷ்குமார் மற்றும் தட்சிணாமூர்த்தியை சரமாரியாக குத்தினர்.

இதில் ரத்தவெள்ளத்தில் கிடந்த இருவரையும் அப்பகுதியினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ்குமார் நள்ளிரவு 12.30 மணி அளவில் உயிரிழந்தார்.  மேல்சிகிச்சைக்காக தட்சிணாமூர்த்தி திருவாரூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சம்பவம் குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து முகமது ஆதாமின் உறவினர்களான ஹாஜிமுகமது மற்றும் முகமது ரசூல்தீன் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். தலைமறைவான முகமது ஆதாமை போலீசார் தேடி வருகின்றனர்.