தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆந்திர வாலிபர் கொலை வழக்கில் ஜனசேனா கட்சி பெண் நிர்வாகி கணவர் கார் டிரைவரிடம் 4 நாட்கள் விசாரணை

தண்டையார்பேட்டை: ஆந்திர வாலிபர் கொலை வழக்கில், ஜனசேனா கட்சி பெண் நிர்வாகியின் கணவர் மற்றும் கார் டிரைவரிடம் ஏழுகிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் சீனிவாசலு ராயுடு. தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த இவர், கடந்த 12ம்தேதி ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா பகுதியில் அடித்து கொலை செய்யப்பட்டார்.

பின்னர், ஜனசேனா கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி, கணவர் உட்பட 5 பேர், இவரது உடலை தமிழ்நாடு சென்னை கொண்டு வந்து பேசின் பிரிட்ஜ் கூவம் பகுதியில் வீசிவிட்டு தப்பினர். இதுகுறித்த தகவலின்பேரில், ஏழுகிணறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர், வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ரத்னவேல்பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்ற வாளிகளான ஜனசேனா கட்சி பெண் நிர்வாகி உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக எதிர்க்கட்சியினர், ஆளுங்கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் சிறையில் உள்ள ஜனசேனா கட்சியின் பெண் நிர்வாகியின் கணவர் சந்திரபாபு (35), கார் டிரைவர் சேக் தாசன் (28) ஆகியோரை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஏழுகிணறு போலீசார், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். கோர்ட் அனுமதிபடி 2 பேரையும் 4 நாட்கள் விசாரணைக்காக ஏழுகிணறு போலீசார் நேற்று காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு விசாரணைக்கு பிறகு திடுக்கிடும் தகவல் கிடைக்கலாம்? என போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Related News