தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஒப்பந்ததாரர் பெயரில் போலி பில்கள் தயாரித்து ரூ.21.64 கோடி பணம் மோசடி அதிமுக நிர்வாகிகள் கைது

மதுரை: மதுரை அருகே தனக்கன்குளம், கார்த்திகா நகரைச் சேர்ந்தவர் பழனிக்குமார். அரசு ஒப்பந்ததாரர். ஒப்பந்த பணிகளுக்கு தேவையான நிதியை விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் நகரச் செயலாளரும், தற்போதைய விருதுநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளருமான சக்திவேல் என்பவரிடம் இருந்து பெற்று வந்துள்ளார். கந்துவட்டிக்கும் பணம் பெற்றதாக தெரிகிறது. மேலும், சக்திவேல் மூலம் கிடைத்த ஒப்பந்த வேலைகளை சப்-கான்ட்ராக்ட் மூலம் செய்துள்ளார்.

இவர் மூலம் கிடைத்த பணிகளை பழனிக்குமார் செய்து முடித்த பிறகு, சக்திவேலும், அவரது மருமகனும், விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான கருப்பசாமி, ராஜலட்சுமி, சதீஷ், மற்றும் சங்கர் ஆகியோர் கணக்கு பார்த்து தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு மீதி குறிப்பிட்ட பணத்தை பழனிக்குமாரிடம் கொடுத்து வந்துள்ளனர். ஆனால், 2017 முதல் கடந்த அதிமுக ஆட்சிக்காலம் வரை பழனிக்குமார் செய்து கொடுத்த பணிகளுக்கு ரூ.21.64 கோடி பணத்தை இருவரும் வழங்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கேட்டபோது சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினர், பழனிக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக பழனிக்குமார் பணிகள் மேற்கொண்ட அரசு அலுவலகங்களுக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது, தான் செய்த டெண்டர் பணிகளுக்கு போலி பில் தயாரித்து அவற்றின் மூலம் சக்திவேல் கோடிக்கணக்கில் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து பழனிக்குமார், மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, சக்திவேல், கருப்பசாமி, ராஜலட்சுமி, சதீஷ் மற்றும் சங்கர் ஆகியோர் மீது மோசடி மற்றும் கந்துவட்டி கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.