தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் இருந்து துர்காபூர் சென்ற விமானத்தின் அவசர கால கதவு திறக்க முயற்சி: ஐஐடி மாணவரிடம் போலீசார் விசாரணை

சென்னை: சென்னையில் இருந்து துர்காப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. விமானத்தில் 158 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உள்பட 164 பேர் இருந்தனர். விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு, விமானம் ஓடுபாதையில் ஓட தயாரானது. அப்போது விமானத்தின் அவசர கால கதவு திறக்கப்படும் எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து, விமான பணிப்பெண்கள் அவசர கால கதவை, திறக்க முயற்சித்தவர் குறித்து விசாரித்தனர். அப்போது விமானத்தின் அவசரகால கதவு அருகே‌, இருக்கையில் அமர்ந்திருந்த, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சர்கார்(27) என்பவர் அவசரகால கதவை திறக்க முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
Advertisement

அதன்பேரில், விரைந்து வந்த விமான பாதுகாப்பு அதிகாரிகள் சர்காரை விமானத்தில் இருந்து கீழே இறக்கி விசாரணை மேற்கொண்டனர். அதில், கிண்டி ஐஐடியில் ஆராய்ச்சி கல்வி படித்து வருவதாகவும், சொந்த வேலையாக துர்காபூர் செல்வதாகவும் தெரிவித்தார். கவனக் குறைவாக விமானத்தின் அவசர கால கதவை திறக்கும் பொத்தனை அழுத்திவிட்டதாக தெரிவித்தார். அதனை ஏற்க மறுத்த விமான பாதுகாப்பு அதிகாரிகள், சர்காரின் விமான பயணத்தை ரத்து செய்தனர். மேலும், சர்காரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒருமணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதுதொடர்பாக சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிந்து சர்காரிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News