சென்னையில் இருந்து துர்காபூர் சென்ற விமானத்தின் அவசர கால கதவு திறக்க முயற்சி: ஐஐடி மாணவரிடம் போலீசார் விசாரணை
Advertisement
அதன்பேரில், விரைந்து வந்த விமான பாதுகாப்பு அதிகாரிகள் சர்காரை விமானத்தில் இருந்து கீழே இறக்கி விசாரணை மேற்கொண்டனர். அதில், கிண்டி ஐஐடியில் ஆராய்ச்சி கல்வி படித்து வருவதாகவும், சொந்த வேலையாக துர்காபூர் செல்வதாகவும் தெரிவித்தார். கவனக் குறைவாக விமானத்தின் அவசர கால கதவை திறக்கும் பொத்தனை அழுத்திவிட்டதாக தெரிவித்தார். அதனை ஏற்க மறுத்த விமான பாதுகாப்பு அதிகாரிகள், சர்காரின் விமான பயணத்தை ரத்து செய்தனர். மேலும், சர்காரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒருமணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதுதொடர்பாக சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிந்து சர்காரிடம் விசாரித்து வருகின்றனர்.
Advertisement