தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேளாங்கண்ணி அருகே தண்ணீர் தேங்கியுள்ள வயல்களில் இரைதேடி குவிந்த கொக்கு கூட்டம்

நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி அருகே வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பறவைகள் சுதந்திரமாக வயல்களில் அமர்ந்து இரை தேடும் காட்சியை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

Advertisement

இந்நிலையில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பறவைகள் வருகை தந்துள்ளது.

குறிப்பாக உள்நாட்டு பறவைகளான கொக்கு, மடையான், நாரை வகைகள், குருவி, குயில்கள் ஆகியவை விவசாய விளை நிலங்கள் நீர்நிலைகள் மற்றும் வயல்வெளிகளில் சுதந்திரமாக சுற்றி வருகின்றது.

இதை சாதகமாக பயன்படுத்தி கொக்கு, மடையான், நாரை போன்ற பறவைகளை வளை விரித்தும், கன்னி வைத்து சிலர் பிடித்து வேட்டையாடி விற்பனை செய்வதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கிராமப்புறங்களில் உள்ள மரங்களில் குயில் போன்ற பறவைகளும் வேட்டையாடப்பட்டு வருகிறது. வனவிலங்கு சட்டப்படி பறவைகளை பிடிப்பதோ வேட்டையாடுவதோ கடுமையான குற்ற செயல் ஆகும்.

கொக்கு, மடையான் ஜோடி ரூ.200 லிருந்து ரூ.300க்கும், குயில் ஜோடி ரூ.500க்கும் படுஜோராக விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்கி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் சமையல் செய்து மதுபிரியர்களுக்கு சைடிசாக கொடுக்கின்றனர். எனவே வனத்துறையினர் பறவைகள் வேட்டையாடுவதை தடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

Advertisement