செஞ்சி சாலை பெரிய வாய்க்காலை தூர்வாரியபோது கிரேன் இயந்திரம் கவிழ்ந்து விபத்து; ஆபரேட்டர் படுகாயம்
இந்நிலையில் கால்வாயை தூர்வார இன்று காலை சிறிய தூர்வாரும் இயந்திரத்தை, கிரேன் மூலம் கால்வாயில் இறக்கி பின்னர் பணிகள் நடந்தது. அப்போது சாலையோர ஸ்லாப் மீது கிரேன் வாகனம் நின்றிருந்த நிலையில் திடீரென ஸ்லாப் உடைந்து கிரேன் சாய்ந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் வாய்க்காலை தூர்வார இறக்கப்பட இருந்த சிறிய இயந்திரமும் தலைகுப்புற வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் கிரேன் ஆபரேட்டர் படுகாயம் அடைந்தார். உடனே இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் படுகாயம் அடைந்த கிரேன் ஆபரேட்டரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் வாய்க்கால ஓரத்தில் சாலையில் கவிழ்ந்த கிரேன் மற்றும் தூர்வாரும் இயந்திரத்தை மீட்டு வெளியே கொண்டுவரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் வாகனத்தை நிறுத்தி போட்டோ, வீடியோ எடுத்து செல்வதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.