தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பட்டாசு ஆலை அதிபர்கள் வீடுகளில் 2 வது நாளாக ரெய்டு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து வருடந்தோறும் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான வர்த்தகம் நடந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடப்பதாக வருமான வரித்துறை மேலதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்தது. அதனடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள், சிவகாசியில் நேற்று முன்தினம் பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனை நேற்று அதிகாலை 1 மணி வரை நீடித்தது, தொடர்ந்து 9 மணி நேர இடைவேளைக்கு பின்பு நேற்று காலை 10 மணிக்கு மீண்டும் சோதனையை தொடங்கினர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த சோதனை காரணமாக பிரபல பட்டாசு ஆலைகளின் அலுவலகங்கள் பூட்டப்பட்டிருப்பதால் ஆர்டர் கொடுக்க வரும் வெளிமாநில வியாபாரிகள் ஆங்காங்கே விடுதிகளில் தங்கி உள்ளனர்.