தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐதராபாத்தில் நள்ளிரவில் பயங்கரம்: பசு பாதுகாவலர் மீது சரமாரி துப்பாக்கி சூடு

 

Advertisement

ஐதராபாத்: ஐதராபாத்தில் பசு பாதுகாவலர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்தவர் சோனு. பசு கடத்தலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவரை நேற்று ஒரு மர்ம நபர் தொடர்பு கொண்டு, பசு கடத்தல் தொடர்பாக தன்னிடம் முக்கிய தகவல்கள் இருப்பதாகவும் காட்கேசர் அருகே வந்தால் அதை சொல்வதாகவும் கூறியுள்ளார். இதை நம்பி, சோனுவும் சென்றுள்ளார். அந்த நேரத்தில் பசு கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் சோனுவை சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் சிலர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு தெலங்கானா பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த மாதவி லதா கூறுகையில், \”பசுக்களை பாதுகாப்பவர்கள்தான் அரசியலமைப்பையும் பாதுகாக்கிறார்கள். இந்த விவகாரத்தில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்றால், போலீசார் அவர்களுக்கு உதவுகிறார்கள் என்று அர்த்தம்..

குற்றவாளி மஜ்லீஸ் கட்சியை சேர்ந்தவர். இது திட்டமிடப்பட்ட கொலை முயற்சி” என்றார். ஒன்றிய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக டிஜிபி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுடன் பேசினேன். தெலங்கானாவில் இது போன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்று டிஜிபி என்னிடம் கூறினார்’ என்றார்.

Advertisement