தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்த போதிலும் வெனிசுலா கும்பலைச் சேர்ந்த 250 பேரை நாடு கடத்திய டிரம்ப்: அமெரிக்காவில் அதிரடி நடவடிக்கை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு சட்டவிரோத குடியேறிகளை தீவிரமாக நாடு கடத்தி வருகிறது. அந்த வகையில், வெனிசுலாவைச் சேர்ந்த சட்டவிரோத சிறை கும்பலான டிரென் டி அராகுவாவைச் சேர்ந்த 250 பேரை நாடு கடத்த டிரம்ப் நிர்வாகம் கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டது. உடனடியாக அவர்கள் 2 குழுவாக பிரிக்கப்பட்டு விமானம் மூலம் எல்சால்வடார் நாட்டிற்கும், ஹண்டுரோசுக்கும் அனுப்பப்பட்டனர்.
Advertisement

இதற்கிடையே, 18ம் நூற்றாண்டு போர்க்கால சட்ட விதியை பயன்படுத்தி டிரம்ப் நிர்வாகம் நாடு கடத்த உத்தரவிட்டதை எதிர்த்து வாஷிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி போஸ்பெர்க், நாடு கடத்தல் உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்தார்.

ஆனால், அந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் சமயத்தில் 2 விமானங்கள் வானில் புறப்பட்டு சென்று கொண்டிருப்பதாக மனுதாரர்கள் தரப்பு வக்கீல்கள் தெரிவித்தனர். இதைக் கேட்ட நீதிபதி, விமானங்கள் திரும்பி வர வேண்டுமென வாய்வழி உத்தரவு பிறப்பித்தார். இது குறித்து வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் அளித்த பேட்டியில், ‘‘நீதிமன்ற உத்தரவை பின்பற்ற நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், பயங்கரவாத சட்டவிரோத குடியேறிகள் ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவுக்கு சட்டப்பூர்வ அதிகாரமில்லை’’ என்றார். நீதிமன்றம் தடை விதித்தும் சட்டவிரோத குடியேறிகளை டிரம்ப் நிர்வாகம் வலுக்கட்டாயமாக நாடு கடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement