தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயில் நிதி முறைகேடு புகாரில் செயல் அலுவலர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

Advertisement

சென்னை: இந்து சமய அறநிலையத் துறையில் முதல்நிலை செயல்அலுவலராக பணியாற்றிய முத்துசாமி என்பவர் மீது கோயில் நிதியில் சுமார் ₹1.37 கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருந்த நிலையில் அதற்கு முன்பே 2020 ஆகஸ்ட் மாதம் அவர் விருப்ப ஓய்வு கேட்டு அறநிலையத்துறை ஆணையருக்கு கடிதம் எழுதினார். அந்த கோரிக்கையை அறநிலையத்துறை ஆணையர் நிராகரித்தார். மேலும், முத்துசாமி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து, தனது விருப்ப ஓய்வை ஏற்குமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிடக்கோரி முத்துசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, செயல் அலுவலரின் விருப்ப ஓய்வு மனுவை ஏற்குமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து அறநிலையத்துறை ஆணையர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அறநிலையத்துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து ெசய்யததுடன் முத்துசாமி மீதான துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

Advertisement