தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அனுமதியின்றி சபரிமலையில் இருந்து சென்னைக்கு கொண்டு சென்ற தங்க தகடுகளை திரும்ப கொண்டு வர நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: அனுமதியின்றி சபரிமலையில் இருந்து பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கத் தகடுகளை உடனே திரும்பக் கொண்டு வரவேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை கோயிலில் முன்புறம் உள்ள துவாரபாரகர் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகளை பழுது பார்ப்பதற்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டு சமீபத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தது. இதற்கு கேரள உயர்நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறவில்லை என்று புகார் எழுந்தது.

Advertisement

இதுகுறித்து சபரிமலை சிறப்பு ஆணையாளர் ஜெயகிருஷ்ணன் கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், தேவசம் போர்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அனுமதியின்றி தங்கத் தகடுகளை சென்னைக்கு அனுப்பி வைத்தது முறையற்றது என்றும், எனவே அவற்றை உடனே சபரிமலைக்கு திருப்பிக் கொண்டு வரவேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தின் தேவசம் போர்டு பெஞ்ச் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்ய தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது.

Advertisement

Related News