தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விபத்தில் இறந்த கடலூர் கப்பல் அதிகாரி குடும்பத்தினருக்கு ரூ 1.91 கோடி நஷ்டஈடு: நீதிமன்றம் உத்தரவு

கடலூர்:கடலூர் முதுநகர் சேர்ந்தவர் கப்பல் அதிகாரி விமல். கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 27 -ம் தேதி கடலூர் செல்லங்குப்பம் ஆஞ்சநேயர் கோவில் பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் விமல் தனது சகோதரி தென்றல் என்பவருடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமல் அவரது சகோதரி தென்றல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisement

இறந்த விமலின் தந்தை சிவலிங்கம், தாய் விஜயா ஆகியோர் கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர்கள் மூலம் நஷ்ட ஈடு கோரி கடலூர் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண் 1-ல் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இறந்த விமல் குடும்பத்தாருக்கு ஒரு கோடி 62 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இறந்த விமல் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு தொடங்கினர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரு கோடி 91 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் வட்டி தொகையுடன் நஷ்ட ஈடு வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.

Advertisement

Related News