தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காணாமல்போன கூரியர் நிறுவன ஊழியர் போரூர் ஏரியில் குதித்து தற்கொலையா? போலீசார் தொடர்ந்து விசாரணை

பூந்தமல்லி: காணாமல்போன கூரியர் நிறுவன ஊழியர் போரூர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அம்பத்தூர் அடுத்த ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (37). தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவரை காணவில்லை என அவரது மனைவி அம்பத்தூர் காவல் நிலையத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
Advertisement

இந்நிலையில், தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலை, போரூர் ஏரியின் மேல் பகுதியில் தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான இருசக்கர வாகனம் ஒன்று நேற்று முன்தினம் நின்று கொண்டிருப்பதாக போரூர் போலீசாருக்கு தகவல் தெரிய வந்தது. உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் வானத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் நேற்று காலை அதே ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போரூர் போலீசாரும், பூந்தமல்லி தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்குச் சென்று ஏரியில் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டனர். விசாரணையில் ஏரியில் இறந்த நிலையில் மீட்கப்பட்டவர் காணாமல் போன பாண்டியன் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்த பாண்டியனுக்கு ₹3 லட்சம் வரை கடன் இருந்ததாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் போரூர் மேம்பாலத்தில் தனது பைக்கை நிறுத்திவிட்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது. இருப்பினும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டாரா என்ற கோணங்களிலும் போரூர் மற்றும் அம்பத்தூர் போலீசார் இணைந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News