தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சொகுசு காரில் ஆடு திருடிய தம்பதி: மானாமதுரையில் பரபரப்பு

 

Advertisement

மானாமதுரை: சொகுசு காரில் ஆடுகளை திருடிச் சென்ற தம்பதியை, சினிமா பாணியில் போலீசார் துரத்திச் சென்று பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே, எமனேஸ்வரத்தில் 5 ஆடுகளை மர்மநபர்கள் திருடி சொகுசு காரில் ஏற்றிச் செல்வதாக, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து மானாமதுரை அருகே ஆலம்பச்சேரி விலக்கில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு சொகுசு கார், போலீசார் நிறுத்தியும் நிற்காமல் வேகமாகச் சென்றது. உடனே போலீசார் மானாமதுரை காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்த போலீசார் காவல்நிலையம் முன்பு காரை மறிக்க முயன்றனர். ஆனால், கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து காரை பின்தொடர்ந்து போலீசார் விரட்டிச் சென்றனர்.

நகராட்சி அலுவலகம் அருகே, போலீசாரின் வாகனம் காரை மறித்தது. உடனே காரில் இருந்த ஆணும், பெண்ணும் அருகில் வைகை ஆற்றில் குதித்து தப்பி ஓட முயன்றனர். போலீசாரும் ஆற்றுக்குள் குதித்து விரட்டிப் பிடித்தனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் மதுரை ஆண்டார்கொட்டாரத்தை சேர்ந்த காளீஸ்வரன் (35), அவரது மனைவி முத்துமாரி (33) என தெரிய வந்தது. இதையடுத்து பரமக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்து திருடப்பட்ட ஆடுகள், கார் மற்றும் தம்பதியை ஒப்படைத்தனர். போலீசார் தம்பதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News