தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரோட்டில் பேன்சி ஸ்டோர் உரிமையாளர் வீட்டில் ரூ.40 லட்சம் கொள்ளை அடித்த பக்கத்து வீட்டு தம்பதி கைது

*உதவுவதுபோல் நடித்து கைவரிசை

Advertisement

ஈரோடு : ஈரோடு மூலப்பாளையம் ரைஸ்மில் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (50). இவர், மூலப்பாளையத்தில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். இவர், புதிதாக ஈரோடு கே.கே. நகர் லட்சுமி கார்டன் பகுதியில் வீடு கட்டியுள்ளார்.புதுமனை புகுவிழா மற்றும் வீடு மாற்றம் செய்வதற்கான பணியில் ஈடுபட்டு இருந்தார். வீட்டில் பல்வேறு செலவுக்காக ரூ.40 லட்சம் பணத்தை வைத்து இருந்தார். கடந்த 31ம் தேதி பீரோவை திறந்து பார்த்து பணம் இருப்பதை உறுதி செய்துள்ளார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி பீரோவை திறந்து பார்த்த போது பணம் மாயமானது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்த், ஈரோடு தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனந்த் வீட்டின் அருகே வசிக்கும் தனியார் நிறுவன பஸ் டிரைவர் மோகன் குமார் (50) மற்றும் அவரது மனைவி வள்ளி (47) ஆகியோர் அடிக்கடி ஆனந்த் வீட்டுக்கு வந்து உதவி செய்தது தெரியவந்தது.

இந்நிலையில் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். அப்போது ஆனந்த், வள்ளி ஆகியோர் வீட்டுக்குள் வந்து சென்றது தெரிந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரூ.40 லட்சத்தை கொள்ளை அடித்தது உறுதியானது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement