நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது: பிரதமர் மோடி பேச்சு
நாட்டிற்கான நோக்கத்தை தவிர வேறு எதுவும் பெரிதில்லை என்று அவர்கள் நினைத்தனர். நாட்டின் நலனை கருத்தில் கொண்டு செய்யப்படும் ஒவ்வொரு செயலும் வீரச்செயலாகும். இந்த சகாப்தம் இயந்திரங்களை தாண்டி இயந்திர கற்றல் என்பதை நோக்கி நகர்ந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மைய நிலையில் உள்ளது. அதன் பயன்பாடானது வழக்கமான மென்பொருளை மாற்றுவதை காணலாம். இந்த சவால்களை சமாளிக்கும் வகையில் நமது இளைஞர்களின் எதிர்காலத்தை உருவாக்குவது அவசியமாகும். நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கு முக்கியமானதாகும்” என்றார். தொடர்ந்து பால புரஸ்கார் விருது பெற்ற சிறுவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
தமிழ்நாட்டு சிறுமிக்கு பால புரஸ்கார் விருது
கலை மற்றும் கலாச்சாரம், வீரம், கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவை, விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய 7 பிரிவுகளில் சிறப்பான சாதனைகள் புரிந்த சிறுவர்களுக்கு பிரதமர் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருது வழங்கும் விழா ராஷ்டிரபதி பவனில் நேற்று நடந்தது. இதில் கலை மற்றும் கலாச்சார பிரிவில் ஹரி கதைகள் கதாகாலட்சேபம் செய்வதில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை சேர்ந்த சிறுமி ஜனனி நாராயணன் உட்பட 17 சிறுவர், சிறுமிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி பாராட்டினார். அவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ், பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது.