தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாடு முழுவதும் ரூ.3,000 கோடி திருட்டு டிஜிட்டல் கைது தொடர்பாக விரைவில் கடுமையான உத்தரவு: உச்ச நீதிமன்றம் உறுதி

புதுடெல்லி: நாடு முழுவதும் நீதிமன்றங்களின் பெயரில் நடைபெறும் டிஜிட்டல் கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு அக்டோபர் 27ம் தேதி தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநில யூனியன் பிரதேச அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை நேற்றைக்கு ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது வழக்கு விசாரணையை மேற்கொண்டு வரும் சிபிஐ மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்துள்ளதாகவும், அதன் ஒரு நகலை மட்டும் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞரிடம் வழங்கபட்டுள்ளது. குறிப்பாக சீலிட்ட அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள விபரங்கள் மிகவும் பாதுகாப்பானது என்பதால், அதனை பொதுவெளியில் வெளியிட முடியாது. இந்த விவகாரத்தில் பொருத்தமான வழிமுறைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட உள்ளது என்று தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள்,‘‘இதுவரை டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ரூ.3,000 கோடி அளவுக்கு திருடப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கிறது. இதில் பெரும்பாலும் சிக்குபவர்கள் வயதான நபர்கள் என்பதை நினைக்கும் போது தான் வேதனையாக உள்ளது. டிஜிட்டல் அரெஸ்ட் போன்ற விவகாரங்கள் நம் நாட்டில் மட்டுமே நடைபெறும் நிலையில் கடுமையான உத்தரவுகளை இந்த விவகாரத்தில் பிறப்பிக்காவிட்டால் இது பெரும் பிரச்சனையாகிவிடும். மேலும் இது இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டிய விவகாரம் என்பதால், இதில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவ.10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement

Related News