தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கவுன்சிலரின் கணவர் தாக்கியதில் வாலிபருக்கு கழுத்தில் எலும்பு முறிவு: வீடியோ வைரல்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சியின் 23வது வார்டு கவுன்சிலராக இருந்து வருபவர் கவிதா புருஷோத்தமன் (42). இந்த வார்டில் உள்ள ரயில்வே காலனி சாலையில் வசித்து வரும் கவுதம் சக்கரவர்த்தி (31) அப்பகுதியில் தூய்மைப்பணி முழுமையாக மேற்கொள்ளவில்லை என சில நாட்களுக்கு முன் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தூய்மை பணியாளர்கள் வந்து அப்பகுதியில் தங்களது பணியை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த கவுன்சிலர் கவிதா, அவரது கணவர் புருஷோத்தமன், மகன் கார்த்திக் (23), அவரது நண்பர் நசீர் (48) உள்ளிட்ட 4 பேரும் தூய்மை பணியாளர்களிடம் வேலையை நிறுத்தி அழைத்துச் சென்றுள்ளனர்.
Advertisement

இதனை பார்த்த கவுதம் சக்கரவர்த்தி, தட்டி கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கவுதமை தகாத வார்த்தைகளால் பேசிய கவுன்சிலரின் கணவர் புருஷோத்தமன் கைகளால் தாக்கியுள்ளார். இதனால் நிலைகுலைந்த கவுதம் சக்கரவர்த்தி கீழே விழுந்துள்ளார். தொடர்ந்து கவிதா, புருஷோத்தமன், கார்த்திக், நசீர் ஆகிய 4 பேரும் இணைந்து கவுதம் சக்கரவர்த்தியை தாக்கியதாக தெரிகிறது. இதில் கவுதம் சக்கரவர்த்திக்கு கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது..இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

எல்.முருகன் கன்டணம்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வார்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என போராடிய கவுதமை, கவுன்சிலர் மற்றும் குடும்பத்தினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இளைஞரை தாக்கிய காங்கிரஸ் கவுன்சிலர் கவிதா மற்றும் அவரது கணவர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement