தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல் ரூ.571.55 கோடி மதிப்பீட்டில் 352 கோயில்களுக்கு திருப்பணி

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மு.பன்னீர்செல்வம் பேசுகையில், திருப்புங்கூர் சிவலோகநாதர் ஆலயத்தில் தற்போது திருப்பணி நடைபெற்று வருகிறது. எப்போது குடமுழுக்கு நடத்தப்படும் என்றார். இதற்கு பதில் அளித்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:

Advertisement

திருக்கோயில்கள் புனரமைத்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து எந்த காலத்திலும் ஏற்படாத ஒரு எண்ணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிந்தையில் உதித்திட்டதன் காரணமாக ஆண்டிற்கு ரூ.100 கோடி வீதம் இதுவரை ரூ.425 கோடி ரூபாயினை அரசின் சார்பில் நிதியாக வழங்கினார். இத்துடன் கூடுதலாக உபயதாரர் நிதி, பொதுநல நிதி மற்றும் திருக்கோயில் நிதி சேர்த்து ரூ.571.55 கோடி மதிப்பீட்டில் சுமார் 352 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதில் 71 திருக்கோயில்களுக்கு இதுவரை குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதர ஆயிரம் ஆண்டு திருக்கோயில்களின் பணிகளை விரைவுபடுத்தி குடமுழுக்கை முடித்து ஒரு வரலாற்று பெருமையை படைத்து இந்த மாமன்றத்தில் தெரிவிப்போம். உறுப்பினர் கோரிய அந்த திருக்கோயிலின் திருப்பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. வரும் ஜனவரி மாத இறுதியில் அந்த திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெறும்” என்றார்.

Advertisement