தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேரவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஐ.டி. விங்க் பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அதிமுக ஐ.டி.விங்க் பொறுப்பாளர்களுடன் எடப்பாடி நேற்று ஆலோசனை நடத்தினார். அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார்.

Advertisement

முதல் கட்டமாக விருதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாநகர் மற்றும் புறநகர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அணிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் மாவட்டப் பொறுப்பாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர்,  புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதிலும், தகுதியற்ற பெயர்களை நீக்குவதிலும் மிகுந்த கவனத்துடன் ஒரு இயக்கமாக செயல்பட வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமைக் கழகச் செயலாளர் எஸ்‌.பி வேலுமணி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

Advertisement

Related News