தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேரவையில் அறிவித்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து 6 துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து 6 துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அவ்வப்போது அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்தும் அரசின் திட்டங்கள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அது தவிர சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் எத்தனை செயலாக்கத்திற்கு வந்திருக்கிறது. அதில் எத்தனை திட்டங்கள் நிலுவையில் உள்ளன என்பது போன்றும் ஒவ்வொரு துறை வாரியாக தலைமை செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
Advertisement

அந்த வகையில் நேற்று நீர்வளத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், சிறப்பு முயற்சிகள் துறையின் செயல்பாடுகள் துறை குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்ட 6 அரசு துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார். இதில் ஒவ்வொரு துறைகளிலும் இதுவரை முடிக்கப்பட்டுள்ள பணிகள் எவ்வளவு? எத்தனை பணிகள் செயல்பாட்டில் உள்ளன? நிலுவையில் உள்ள பணிகள் எவ்வளவு? கைவிடப்பட்ட பணிகள் ஏதும் உள்ளதா? என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தலைமை செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் மற்றும் துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News