தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இருமல் மருந்து விவகாரம் எதிரொலி மருந்து தர கண்காணிப்பை கடுமையாக்க புதிய சட்டம்: குளிர்கால கூட்டத்தொடரில் இயற்ற ஒன்றிய அரசு திட்டம்

புதுடெல்லி: மருந்து தர சோதனை மற்றும் சந்தை கண்காணிப்புகளை கடுமையாக்க புதிய சட்டம் கொண்டு ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை குடித்த 22 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் நாட்டையே உலுக்கியது. இந்த மருந்துக்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டு, மருந்து நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மருத்துவ பொருட்களுக்கான பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டுமென கோரிக்கைகள் வலுத்துள்ளன.

Advertisement

மேலும் இந்திய மருந்து உற்பத்தியாளர்களின் கடுமையான தர குறைபாடுகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள சுகாதார ஒழுங்குமுறை அமைப்புகள் மீண்டும் மீண்டும் புகார் எழுப்பி வருகின்றன. எனவே மருந்துகளின் தர சோதனை மற்றும் சந்தை கண்காணிப்பை கடுமையாக்க ‘மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டம் 2025’ என்ற மசோதாவை வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான வரைவு ஆவணம் நேற்று முன்தினம் நடந்த ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் உயர்மட்ட கூட்டத்தில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைவர் ராஜீவ் ரகுவன்ஷி சமர்ப்பித்துள்ளார். புதிய சட்டத்தின்படி, போலி அல்லது தரமற்ற மருந்துகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பிற்கு (சிடிஎஸ்சிஓ) முதல் முறையாக சட்டப்பூர்வ அதிகாரங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய சட்டம் 1940ம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டத்தை மாற்றும். இது சர்வதேச தர நிலைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

Related News