தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இருமல் மருந்து சாப்பிட்டு 14 குழந்தைகள் பலி மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி டிரான்ஸ்பர்: மபி அரசு நடவடிக்கை

போபால்: மபியில் இருமல் மருந்து சாப்பிட்டு 14 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை உயர் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். மபி, ராஜஸ்தானில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டு உடல் நலன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மபி, சிந்த்வாரா மாவட்டத்தில் மட்டும் 14 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் பல குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருமல் மருந்தின் மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டதில் அதில் அதிக நச்சு பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கோல்ட்ரிப் மருந்துக்கு மபி உள்பட பல மாநிலங்கள் தடை விதித்துள்ளன.

Advertisement

கோல்ட்ரிப் மருந்தை பரிந்துரை செய்த சி்ந்த்வாரா அரசு மருத்துவமனை டாக்டர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மபி முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் உயர் அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின் மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை உயர் அதிகாரி தினேஷ் மவுரியாவை மாநில அரசு இடமாற்றம் செய்துள்ளது. மேலும் மருந்து ஆய்வாளர்களான கவுரவ் சர்மா,சரத் குமார் ஜெயின் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை துணை இயக்குனர் ஷோபித் காஸ்டா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement