தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இருமல் மருந்தால் 14 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

புதுடெல்லி: மத்தியப்பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில் இருமல் மருந்தை உட்கொண்ட 14 குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மருந்தில், அனுமதிக்கப்பட்ட 0.1 சதவீத அளவைக் காட்டிலும் மிக அதிகமாக, அதாவது 48.6 சதவீதம் வரை ‘டைஎத்திலீன் கிளைக்கால்’ என்ற நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள் கலந்திருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது.

Advertisement

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,\\”குழந்தைகள் மரணங்கள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் மருந்து தயாரிப்பு, ஒழுங்குமுறை, சோதனை மற்றும் விநியோகம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட மருந்து தயாரிப்புகளை தடை செய்து, நாடு தழுவிய அளவில் திரும்பப்பெற வேண்டும். அனைத்து இருமல் மருந்துகளிலும் நச்சுத்தன்மை உள்ளதா என கட்டாய சோதனை நடத்த வேண்டும். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வலியுறுத்தி உள்ளார். இதையடுத்து இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Related News