தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இருமல் மருந்துக்கு 24 குழந்தைகள் பலி; சென்னை மருந்து கம்பெனி அதிபருக்கு நீதிமன்ற காவல்: மபி நீதிமன்றம் உத்தரவு

சிந்த்வாரா: இருமல் மருந்து சாப்பிட்டு 24 குழந்தைகள் பலியான சம்பவத்தில் கைதான மருந்து கம்பெனி அதிபர் ரங்கநாதனை நீதிமன்ற காவலில் வைப்பதற்கு மபி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மபி மாநிலம்,சிந்த்வாராவில் கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்தை குடித்ததில் 24 குழந்தைகள் பலியாகினர். தரமற்ற மருந்தை பரிந்துரை செய்ததாக சிந்த்வாரா பகுதியில் உள்ள மருத்துவர் பிரவீன் சோனியை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

கோல்ட்ரிப் மருந்தை விநியோகம் செய்த சவ்ரவ் ஜெயின்,மருந்து கடை அதிபரும் பிரவீன் சோனியின் உறவினருமான ராஜேஸ் சோனி, பிரவீனின் மனைவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கோல்ட்ரிப் மருந்தை தயாரித்த குற்றச்சாட்டின் கீழ் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்ரீசன் பார்மசூட்டிக்கல் நிறுவனத்தின் அதிபர் ரங்கநாதனை மபி சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்து சிந்த்வாராவுக்கு கொண்டு சென்றனர். அவரது 10 நாள் போலீஸ் காவல் நேற்று முடிவடைந்தது.

இதையடுத்து பராசியாவில் உள்ள கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் ரங்கநாதனை போலீசார் ஆஜர்படுத்தினர்.அப்போது ரங்கநாதனை சிறையில் அடைக்க நீதிபதி கவுதம் குர்ஜார் உத்தரவிட்டார். இதற்கிடையே,மருத்துவர் பிரவீன் சோனி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உள்ளூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் அவர் மபி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisement

Related News