தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மயிலாடுதுறை மாவட்டத்தில் பருத்தி சாகுபடியில் இந்தாண்டு நல்ல மகசூல்

*விவசாயிகள் மகிழ்ச்சி
Advertisement

சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டத்தில் பருத்தி சாகுபடியில் இந்தாண்டு நல்ல மகசூல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, மங்கைமேடம், குத்தாலம், செம்பனார்கோயில், வைத்தீஸ்வரன் கோயில், ஆக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் இந்த ஆண்டு சுமார் 13 ஆயிரத்து 500 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது பருத்தி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு ஆண்டுக்கு பருத்தி பயிரிட்ட பின் சுமார் ஆறுமுறை வரை பருத்தி மகசூல் எடுக்கப்படுகிறது.

ஒரு ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்ய ரூ.30ஆயிரம் வரை செலவாகும் நிலையில் பருத்தி அறுவடைக்குப் பின் ஒரு ஏக்கருக்கு ரூ.1 ஒரு லட்சம் வரை கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7000 விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ஒரு குவிண்டால் ரூ.7400 வரை விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பருத்தி சாகுபடி செய்யப்பட்ட பெரும்பாலான இடங்களில் பருத்தி நல்ல மகசூலை தந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக தேவையான நேரங்களில் கோடை மழை பெய்ததால் இந்தாண்டு நல்ல மகசூல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு பருத்தி சாகுபடி மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக அளவில் பருத்தி பயிரிட்ட நிலையில் இந்த ஆண்டு குறைவாக பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் சுமார் 50 சதவீதத்திற்கு மேல் பருத்தி எடுக்கும் பணிகள் முடிவடைந்து விவசாயிகள் பருத்தியை விற்பனை செய்து வருகின்றனர். பருத்தி கொள்முதல் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக தெரிய வருவதாகவும் அப்படி விலை உயர்ந்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள் எனவும் பருத்தி பயிரிட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News