தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

என் மீதான ஊழல் வழக்கை எதிர்கொள்ள பதவி இழக்கவும் தயார்: ஒன்றிய அமைச்சர் குமாரசாமி அதிரடி

பெங்களூரு: கர்நாடக முதல்வராக குமாரசாமி இருந்த போது குவாரி நிறுவனத்துக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை விசாரித்த லோக்ஆயுக்தா 2017ம் ஆண்டு சுரங்க முறைகேடு வழக்கில், குமாரசாமி மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநரிடம் 2023ம் ஆண்டு அனுமதி கோரியிருந்தனர். ஆனால் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் இதுவரை அனுமதியளிக்கவில்லை. தற்போது, முதல்வர் சித்தராமையா மீதான மூடா மாற்று நில முறைகேடு விவகாரத்தில் புகார் கிடைத்த அன்றைய தினமே அவருக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியதுடன், அவர் மீது வழக்குப்பதிய அனுமதியும் வழங்கினார்.
Advertisement

இது சர்ச்சையை கிளப்பவே, முன்னாள் குமாரசாமி மீதான முறைகேடு வழக்கை விசாரித்துவரும் லோக்ஆயுக்தா போலீசார், அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்குமாறு கடந்த திங்கட்கிழமை மீண்டும் அனுமதி கேட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சர் குமாரசாமி நேற்று பெங்களூருவில் மஜத கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘என்னை சிக்கவைப்பதற்கு பல முயற்சிகள் நடக்கின்றன. என் மீதான குற்றச்சாட்டுகளை நானே எதிர்கொள்வேன்.

தேவைப்பட்டால் கண்டிப்பாக நான் ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன். நான் முதல்வராக இருந்தபோது எனக்கு எதிரான வழக்குகளை பதவியை பயன்படுத்தி முடித்திருக்க முடியும். இந்த வழக்கை விசாரித்துவரும் எஸ்.ஐ.டி, இத்தனை ஆண்டுகளாக ஏன் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை?’ என்றார். குமாரசாமி மீதான புகார் குறித்து முதல்வர் சித்தராமையா கூறும்போது, ‘ஸ்ரீசாய் வெங்கடேஷ்வர மினரல்ஸ் (எஸ்எஸ்விஎம்) குவாரி நிறுவனத்திற்கு இரும்பு தாது வெட்டி எடுக்க 550 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்த புகாரில் ஒன்றிய அமைச்சர் குமாரசாமியை நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்’ என்றார்.

Advertisement

Related News