தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநகராட்சி பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியில் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 71வது வார்டு எஸ்எஸ் காலனி அருகே உள்ள கந்தன் சேர்வை நகர், 8வது தெருவில் உள்ள 40 அடி அகல சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பப்படுவதாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் சம்பந்தப்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பிலிருந்து, அந்த இடம் தங்களுக்கு ெசாந்தமானது என்றும், அதனை உறுதி ெசய்வதற்கு தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement

இதனை மாநகராட்சி அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். ஆனால், உரிய காலத்திற்குள் நிலத்திற்கான ஆவணங்களை எதிர்தரப்பினர் சமர்ப்பிக்கவில்லை. இதனால், அப்பகுதியில் இந்த ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்ற முடிவு ெசய்யப்பட்டது. இதன்படி மாநகராட்சியின் இரண்டாவது மண்டல உதவி கமிஷனர் சாந்தி, வார்டு பொறியாளர் தன்யா ஆகியோர் தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் இடித்து அகற்றும் பணிகளை நேற்று மேற்கொண்டனர். மேலும், அந்த இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாத வகையில், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Related News