தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜூன் 21ல் நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் டவுன் ரதவீதிகளை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

*தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
Advertisement

நெல்லை : நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை டவுன் ரதவீதிகளை நேற்று நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் நேரில் ஆய்வு செய்தார்.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு வரும் 13ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து 21ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி நெல்லை டவுன் ரதவீதிகளில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. கோயில் தேர்களை சுத்தப்படுத்தும் பணிகள் முடிந்து தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.தேர் செல்வதற்கான பாதை, ரதவீதிகளில் தேவையற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சிறுசிறு குழிகளை சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், டவுன் 4 ரதவீதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார். தேரோட்டம் நடைபெறும் ரதவீதிகளில், தேர்கள் திரும்பும் இடங்கள், வாகையடி முனை, லாலாசத்திர முக்கு உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு டேப் மூலம் அளவீடுகள் செய்து, தேர்கள் திரும்ப போதிய இட வசதி உள்ளதா என்று ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது மாநகராட்சி செயற்பொறியாளர் வாசுதேவன், உதவி செயற்பொறியாளர் லெனின், சுகாதார ஆய்வாளர் முருகன், சிவகுமார் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

Advertisement

Related News